Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, பிள்ளாநல்லூர் பகுதியில் கடந்த மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்டு கண் குறைபாடு கண்டறியப்பட்டு 126 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி தலைமையில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் Dr.சியாம்சுந்தர், மாவட்ட செயலாளர் R.P.தமிழரசு, மாநில துணை தலைவர் CGS R.லோகேந்திரன், ஒன்றிய தலைவர் மு.வடிவேல் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதில் பாஜக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கண் கண்ணாடி வழங்கிய மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.